புதுச்சேரியில் முத்தையால் பேட்டையில் வசித்து வருபவர் ரஹ்மத்துல்லா என்ற முகமது ஷபான். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திருமணம் ஆகவில்லை என்று கூறி பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். அதாவது இவர் சமூக வலைத்தளங்களில் பெண்களிடம் பேசி தன்னை ஒரு நல்ல மனிதனாக காட்டி தன்னை ஒரு பெரிய தொழிலதிபர் மற்றும் ஒரு இரும்பு தொழிற்சாலை நடத்தி வருகிறேன் என்று ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு கதை சொல்லி பெண்களை குறி வைத்து மிரட்டி நகை மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து வந்துள்ளார்.

இவர் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரிடம் 415 சவரன் நகைகளை வாங்கி மோசடி செய்த நிலையில் அந்த பெண் போலீசில் அழைத்த புகாரைத் தொடர்ந்து தற்போது போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் இது போன்ற நபர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.