சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் அகரம் சின்னசாமி தெருவில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 1/2 வயதுடைய ஸ்ரீ மோனிஷ் என்ற மகனும், 1 1/2 வயதுடைய பிரகன்யா ஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த பிரகன்யா ஸ்ரீயை திடீரென காணவில்லை. இதனால் பெற்றோரும் குடும்பத்தினரும் குழந்தையை தேடி பார்த்தனர்.

அப்போது குளியல் அறையில் இருந்த தண்ணீர் வாளிக்குள் பிரகன்யா ஸ்ரீ தலைக்குப்புற கிடப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரகன்யா ஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.