இயற்கையில் உள்ள அனைத்திலும் இரக்கம் கொண்டதும், புத்திசாலித்தனமான ஒரு விலங்கு  யானைதான். அது தன் கருணையால் மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் உதவக்கூடிய தன்மை கொண்டது. தற்போது, இதன் ஒரு உண்மையான எடுத்துக்காட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், ஒரு மான் தண்ணீர் நிரம்பிய ஒரு பெரிய குழிக்குள் தவறி விழுந்துள்ளது. தன்னால் மீண்டும் வெளியே வர முடியாமல் தவிக்கும் அந்த மானை பார்த்ததும், அருகில் இருந்த ஒரு யானை தன் தும்பிக்கையைச் செலுத்தி மானின் கொம்பைப் பிடித்து  வெளியே இழுக்கிறது.

இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி, நெட்டிசன்களின் மனங்களை பாதித்துள்ளன.
“மற்றொரு உயிருக்காக யானை எடுத்த முயற்சி… மனிதர்களுக்கு ஒரு பாடமாக இருக்கக்கூடும்” என்று ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக தளமான “X” (ல், @AmazingSights என்ற பக்கம் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. வெறும் 14 வினாடிகள் நீளமுடைய இந்த வீடியோ இதுவரை 55,000-க்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் இதைப் பகிர்ந்தும், “அற்புதம்”, “பாசமே பரமோதாரம்” என்ற வகையிலான கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் ஏற்கனவே நடந்த நிலையில் தற்போது இந்த வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.