சென்னையை சேர்ந்த முன்னாள் பளுதூக்கும் வீராங்கனை சாமுண்டீஸ்வரி(53)உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தேசிய அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் இவர். 1992, 1994ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய வலுதூக்கும் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் தற்போது உயிரிழந்துள்ளார்.