ரிசர்வ் வங்கியின் தங்க பத்திரங்களை எஸ்பிஐ வங்கி மூலம் வாங்கிக் கொள்ளலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. தங்கத்தை டிஜிட்டல் முறையில் பத்திரங்களாக ரிசர்வ் வங்கி வழங்கி வருகின்றது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பத்திரத்தின் விலை 5926 ரூபாயாகும். ஆன்லைனில் வாங்கினால் 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இந்த பத்திரத்தின் மூலம் ஆண்டுக்கு 2.5 சதவீதம் பட்டியும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் அதற்கு தங்க பத்திரம் தான் சிறந்த முதலீடு. எல்லா நெருக்கடியிலும் தங்கத்தின் மதிப்பு எப்போதும் உயரக்கூடும்.தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்க பத்திரத்தின் மதிப்பும் உயரும். இதற்கு ஜிஎஸ்டி கிடையாது . அது மட்டும் அல்லாமல் வருடத்திற்கு இரண்டு புள்ளி ஐந்து சதவீதம் வட்டி வருமானமும் உங்களுக்கு கிடைக்கிறது. செய்கூலி மற்றும் சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் எதுவும் கிடையாது. தங்கத்தை பாதுகாக்க வேண்டிய அவசியமும் தங்க பத்திரத்தில் கிடையாது. வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச்சந்தை மூலமாக தங்க பத்திரத்தை வாங்கிக் கொள்ளலாம்