சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இருந்து செய்களத்தூருக்கு அரசு பேருந்து இயக்கப்படும் பேருந்தை ஜெயராமன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் செய்களத்தூர் விளக்கு பகுதியில் சாலையோரமாக நின்ற மோட்டார் சைக்கிளை எடுக்க வலியுறுத்தி ஜெயராமன் தகாத வார்த்தையால் பேசியதாக தெரிகிறது.

அப்போது சாலை ஓரமாக நிற்கும் வாகனத்தை ஏன் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பேருந்தில் இருந்த பயணிகளும் டிரைவரை கண்டித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.