திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பத்தியவாடி கிராமத்தில் 15 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. கடந்த 20-ஆம் தேதி திருமணம் நடக்க விருந்த நிலையில் அது தொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகைக்கு புகார்கள் சென்றது. இதனால் சமூக நலத்துறை குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் அந்த கிராமத்திற்கு சென்றனர்.

அங்கு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரை சந்தித்து படிக்கும் வயதில் திருமணம் செய்து வைக்கக் கூடாது என அறிவுரை வழங்கினர். இதனையடுத்து குழந்தை திருமணம் செய்து வைத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறி அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள்.