உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒருசில வீடீயோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் ஒரு பெரிய யானை சிங்கக் குட்டிகளை விரட்டிய சம்பவம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு காயம்பட்ட சிங்கம் தன் மூன்று குட்டிகளுடன் ஒரு புள்வெளி தளத்தில் அமர்ந்திருக்கிறது.

சிங்கத்தை கவனித்த யானை, அவர்கள் அருகில் செல்கிறது. அதைப் பார்த்த தாய் சிங்கம் குட்டியை வாயில் கவ்வி கொண்டு ஓடுகிறது. இரண்டு குட்டி சிங்கங்கள் தாயின் பின்னால் நடந்து வருகின்றன. அவர்களை துரத்த முயலும் யானை யு-டர்ன் எடுத்து காட்டு பகுதிக்குள் சென்றது. அதன் மூலம் இரண்டு சிங்கக் குட்டிகளும் உயிர் தப்பியது.