பொதுவாக ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் வேலை செய்பவர்கள் லட்சக்கணக்கில் சம்பளம், சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள் என்றுதான் நம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் சில சூழ்நிலைகளில் அந்த ஐடி வேலைகள் இடத்திற்கும், நேரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் வேலை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்த வீடியோஒன்று  சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது  ஹைதராபாத்தில் ஸ்கூட்டியில் சென்ற ஒருவர் தனது காலடியில் மடிக்கணினியை வைத்துக்கொண்டு பாதியில் நின்று வேலை செய்து கொண்டே வாகனம் ஓட்டினார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் சாஃப்ட்வேர் வேலைகள் இப்படித்தான் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.