
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 92வது கூட்டம் ஜனவரி 18ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தெரிவித்துள்ளார். கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒழுங்காற்று குழுவின் 91வது கூட்டம் கடந்த மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.