பீகார் மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு ஆதார் அட்டை அடிப்படையிலான கட்டண முறை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் ஜனவரி மாதம் 15ஆம் தேதிக்குள் ஆதார் இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. தற்போது 85 சதவீதம் பேர் வேலை அட்டைதாரர்கள் உள்ளனர்.

அவர்களின் வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15ஆம் தேதிக்குள் அனைவரும் இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு இணைத்தால் மட்டுமே வேலை செய்பவரின் சம்பளம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.