மலேசியாவில் உள்ள ஜோகூர் பகுதியில் புலாய் ஆறு அமைந்துள்ளது. இங்கு ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமானதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக தற்போது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.