டெல்லியில் சரக்கு ரயில் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. டெல்லி பட்டேல் நகர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில், ரயிலின் 8 பெட்டிகள் மொத்தமாக கவிழ்ந்துள்ளன. வளைவில் ரயில் வேகமாக திரும்பியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சரக்கு ரயில் என்பதால் இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை