தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சமையல் வேலை செய்யும் சக்தி தினமும் குடித்துவிட்டு வந்து அனுசியாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்து மனைவியை சக்தி அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சக்தியில் 15 வயது மகன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சக்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.