இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் தேநீரில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி பேசும் இந்த வீடியோ, நுகர்வோர் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மேலும் ஒரே தரமான தேநீரை வெவ்வேறு விலைகளில் விற்பது அல்லது அளவுகளில் மோசடி செய்வது என அந்த வீடியோவில் காட்டப்படும் காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. “நெக்ஸ்ட் லெவல் ஸ்கேம்” என்று வர்ணிக்கப்படும் இந்தச் செயல், சாதாரண மக்களிடம் இருந்து சிறு சிறு தொகையாக எப்படி பெரிய அளவில் பணம் பறிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது.

 

View this post on Instagram

 

A post shared by 𝐀𝐧𝐤𝐮𝐫 𝐏𝐚𝐧𝐝𝐞𝐲🍁🐚 (@ankurpandeylife)

“>

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மக்கள் தங்களுக்கு நேர்ந்த இது போன்ற அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். லாபத்திற்காக தரம் மற்றும் நேர்மையை விலை பேசும் வியாபாரிகளின் தந்திரங்களை இந்தச் செய்தி அம்பலப்படுத்துகிறது.

இந்நிலையில் 5 ரூபாய் தேநீர் தானே என்று நாம் அலட்சியமாக விட்டுவிடும் விஷயங்களில் தான் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கின்றன என்பதை இந்தத் தொகுப்பு நமக்கு உணர்த்துகிறது. இதைப் பார்த்த பிறகு, நீங்கள் வெளியே தேநீர் குடிக்கும்போது நிச்சயம் ஒரு நிமிடம் யோசிப்பீர்கள் என்பது மட்டும் உறுதி.