பாஜக கூட்டணியில் பாமக கடந்த முறை 7 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தைலாபுரம் தோட்டத்திற்கு அண்ணாமலை 6 மணி வந்தார். ஆனால், காலை 7.30 மணி வரை நல்ல நேரம் இல்லை. இதனால், இருகட்சிகளின் தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிய நிலையில், சரியாக காலை 7.47 மணிக்கு நல்ல நேரத்தில் தொகுதி உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்