கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள கூகையூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் செல்வி நேற்று வீட்டை பூட்டி விட்டு செல்வி உறவினர் வீட்டிற்கு டிவி பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் திருட முயற்சி செய்ததை பார்த்தார். உடனே செல்வி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதற்கிடையே அந்த நபர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் விடாமல் அவரை துரத்தி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்தி விசாரணையில் அந்த நபர் பாவளம் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் என்பது தெரியவந்ததுm அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.