மெட்டி ஒலி சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்தவர் நடிகர் தீபா ஷங்கர். இவர் பல தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகர் கார்த்திக் நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த நல்ல வரவேற்பு பெற்றார் . அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழின் உச்சிக்கு சென்றார். இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தீபா, டிவில எல்லாம் குழந்தை டான்ஸ் ஆடுறாங்க பாட்டு பாடுறாங்க. நான் கண்ணால் பார்த்திருக்கிறேன் . அந்த குழந்தைகள் அந்த தாய்மார்கள் எத்தனை சித்திரவதை செய்கிறார்கள் என்று .

குழந்தைகளின் மனநிலை பாதிக்கும் அளவுக்கு சித்திரவதை செய்கிறார்கள் . என் குழந்தை உலகத்திலேயே பெரிய ஆளாவான். இயற்கையிலேயே குழந்தைகளுக்கு பாடக்கூடிய திறமை இருந்தால் யாரும் மறைக்க தேவையில்லை . எப்படி இருந்தாலும் அது வெளியே வந்துடும். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் . குழந்தை என்பது உங்கள் கையில் இருக்கும் குரங்கு பொம்மை அல்ல. எல்லாம் நீங்கள் சொல்வது போல் எல்லாம் ஆடுவதற்கு என்று தன்னுடைய ஆதங்கத்தை  வெளிப்படுத்தியுள்ளார்.