நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் . இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . இதனை தொடர்ந்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது காதுக்கு வரும் நரம்பில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்ததையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. பிறகு நலமுடன் வீடு திரும்பினார். அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் குறித்து ஏராளமான வதந்திகள் வந்து கொண்டிருந்தது . இந்த நிலையில் இதுகுறித்து பயில்வான் அளித்துள்ள பேட்டியில் , அஜித் முழு உடலை பரிசோதனை செய்து கொண்டார்.

அஜித்திற்கு கண்ணிலும் கோளாறு இருக்கிறது. அதற்காக அவர் கண் மருத்துவர் அணுகுவார் என்று தெரியும் . அப்போலோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்த பிறகு மருத்துவர் அவருக்கு காது பக்கத்தில் நரம்பில் வீக்கம் இருப்பதாக கூறினார். அதை உடனே ஆபரேஷன் செய்துவிடலாம் என மருத்துவர் கேட்க அஜித்தும் ஆபரேஷன் செய்து குணமடைந்து வீடு திரும்பினார் .ஒருமுறை நாங்கள் அஜித் அலுவலகத்திற்கு சென்ற போது அவர் கை நிறைய மாத்திரைகளை சாப்பிடுகிறேன்.  என் உடலில் அவ்வளவு நோய் இருக்கிறது என்று சொன்னார். அஜித்திற்கு இதுவரை எட்டு ஆப்பரேஷன் நடந்திருக்கிறது .அவருக்கு முதுகு தண்டில் கீறல் விழுந்திருப்பது எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.