கரூர் மாவட்ட பேருந்து நிறுத்தத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு டவுன் பேருந்து கள்ளப்பாளையம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இந்நிலையில் பஞ்சமாதேவி அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை டிரைவர் நிறுத்தவில்லை. இதனால் பெண் பயணி ஒருவர் டிரைவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் டிரைவர் அப்படியே சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டார்.

அவர் பேருந்தை இயக்க முடியாது என கூறி அடம் பிடித்தார். இதனால் டிரைவருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற மற்ற அரசு பேருந்து ஓட்டுநர்கள் சமாதானப்படுத்தியதால் டிரைவர் மீண்டும் பேருந்தை அங்கிருந்து ஓட்டி சென்றார். இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.