கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பட்டு கிராமத்தில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்பரசன் தந்தை சங்கர் ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இந்நிலையில் சோழபாண்டியபுரம் கிராமத்தில் வசிக்கும் சந்தியா என்பவருக்கும் அன்பரசுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது.

அன்பரசு தனது தந்தையின் உருவத்தை மெழுகு சிலையாக வடிவமைத்து தனது திருமண நிகழ்ச்சியில் வைத்துள்ளார். திருமண ஊர்வலத்தின் போதும் தனது தந்தை உடன் வருவது போல சிலையை அருகில் வைத்துக் கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.