தமிழகத்தில் டிப்ளமோ படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்ள வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து ஆறு வருடத்திற்குள் உள்ளவர்கள் கல்லூரிகளுக்கான கட்டாய வருகை பதிவு குறைவால் தேர்வு எழுத முடியாமல் படிப்பை பாதியில் விட்ட மாணவர்கள் மீண்டும் கல்லூரியில் சேரலாம்.

இதற்கு மாணவர்கள் http://readmission.tnpoly.in/ என்ற இணையதளத்தில் டிசம்பர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு செய்தால் மட்டுமே போதும் எனவும் கூடுதல் விவரங்களை அறிய அருகில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.