பெண் எஸ் பி- க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 68 சாட்சிகளிடம் விசாரணை முடிந்த நிலையில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.

அதன்படி ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்பி இடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்துக்கொண்டு சென்றபோது பாலியல் தொல்லை அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.