அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றுவது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலாகா மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அரசாணை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநில அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்கள் வகிக்கும் இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதலமைச்சரின் அதிகாரமாகும். ஆளுநர் இதில் தலையிட அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்று உள்ளார்.