டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட குரூப் 1 மற்றும் குரூப் 2 முதன்மை தேர்வுகளில் முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் ஒன் தேர்வுகள் ஆகஸ்ட் மாதமும் குரூப் 2 தேர்வுகள் பிப்ரவரி மாதமும் நடந்து முடிந்தன. இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் தேர்வர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் ஜனவரி மாதமும், சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாதமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.