பால் பொருட்களை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பாக்கெட்டில் விற்பனை செய்ய கோரிய வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. பால் பொருட்களை விற்பனை செய்யும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மக்கும் தன்மை அற்றவை என்றும், இந்த பிளாஸ்டிக்-ஐ மறுசுழற்சி செய்ய போதுமான வசதிகள் இல்லை எனவும் கூறியிருந்தார். டாஸ்மாக் டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை செய்ய திட்டமிட்டு வரும் நிலையில், ஆவின் நிறுவனம் புதிய முயற்சியை கையில் எடுக்குமா? என கேள்வியெழுந்துள்ளது.