நீதிமன்றங்களுக்கு விசாரணைக்கு செல்லும் போது வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக்கூடாது என்று தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களைத் தவிர மற்ற இடங்களில் வழங்கறிஞர்கள் கழுத்துப் பட்டையே, வக்கீல் கவுனையே அணியக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா பார் கவுன்சில் விதிப்படி, வழக்கறிஞர்கள் ஆடை விதிமுறையை பின்பற்றவில்லை என புகார் எழுந்த நிலையில், நீதிமன்றங்களுக்கு விசாரணைக்கு செல்லும் வழக்கறிஞர்களுக்கு இந்த திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.