ஜி 20 மாநாட்டை முன்னிட்டு பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி ஜி 20 மாநாடு முடியும் வரை அமைச்சர்கள் அனைவரும் தலைநகரிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டங்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிந்து கொள்ளுமாறும் இதற்காக ஜி 20 செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.