இந்தியாவின் பெயரை பாரத் என்ற மாற்றம் செய்வதற்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா என்ற வார்த்தையை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கினால் மீண்டும் ஒருமுறை பணமதிப்பு நீக்கம் செய்ய நேரிடும். ரூபாய் நோட்டுகளில் Reserve Bank of India என எழுதப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பெயரை மாற்றினால் 100,200,500 ரூபாய் நோட்டுகள் செல்லாது ஆகிவிடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.