சென்னை மணலி மாத்தூர் எம் எம் டி ஏ பகுதியை சேர்ந்த டில்லி பாபு என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தெரு நாய்களுக்காக சன் பீஸ்ட் மேரி லைட் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அதில் ஒரு பிஸ்கட் குறைவாக இருந்ததால் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த பலத்தை விசாரணை செய்த நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ITC நிறுவனத்திற்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும் தெரு நாய்களுக்கு உணவளிக்க வாங்கிய பிஸ்கட் பாக்கெட்டுகளில் 16 க்கு பதிலாக 15 பிஸ்கட் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.