இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான jio தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் இரண்டு புதிய ஜியோ ஏர் பைபர் பூஸ்டர் திட்டம் என்ற கூடுதல் இணைய சேவை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் டேட்டாவை விட கூடுதல் டேட்டா வழங்கப்படும். பயனர்கள் 101 ரூபாய் மதிப்புள்ள டேட்டா பூஸ்டர் பேக்கை ரீசார்ஜ் செய்தால் மாதம்தோறும் வழங்கப்படும் டேட்டாவை விட கூடுதலாக 100 ஜிபி இணைய சேவை கிடைக்கும்.

அதனைப் போலவே 251 ரூபாய் மதிப்புள்ள டேட்டா பூஸ்டர் பேக்கை ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக 500 ஜிபி இணைய சேவை வழங்கப்படும். இதற்கான கால அளவு ரீசார்ஜ் செய்த நாளிலிருந்து சரியாக ஒரு மாதம் மட்டும் நீட்டிக்கப்படும். அது மட்டுமல்லாமல் பயனர்கள் இந்தப் போக்கின் கூடுதல் டேட்டாக்களை மாதாந்திர டேட்டா லிமிட் முடித்த பிறகு பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் மூலமாக கிடைக்கும் டேட்டாக்களை அடுத்த மாதம் உபயோகிக்க இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.