கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில்திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். அவர் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர்.பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டத்தில் இருந்து பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் சொந்த ஊரான, ராய்ரங்பூருக்கு (ஒடிசா) முதல் முறையாக பயணிகள் ரயில் இயக்கப்பட உ ள்ளது.

தென்கிழக்கு ரயில்வேயில் 4 புதிய ரயில்களை இயக்க ரயில்வே துறை ஒப்புதல் தந்துள்ளது. அவற்றில் 3 மயூர்பஞ்ச் மாவட்டத்திற்கு இயக்கப்படுகிறது. இதன்மூலம், ராய்ரங்பூரில் முதல் முறையாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட உள்ளதால், அந்தப் பகுதி வளர்ச்சிபெறும் என மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.