காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தில்லியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி உடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

நேற்று முதலே சுவாசத் தொற்றினால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்போது உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் நடந்து வரும் நிலையில், சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின் பிரியங்கா காந்தி மீண்டும் நடைப் பயணத்தில் இணைவார் என கூறப்படுகிறது.