கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகில் தளி அடுத்துள்ள பசவனதொட்டி எனும் கிராமத்தில் சுரேஷ்-சசிகலா என்பவர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு ரக்ஷித் என்ற 3 வயது மகன் இருந்தான். இவர்கள் வசித்து வந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் மாலை சிறுவன் ரக்ஷித் வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்தான்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் இடிந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் மீது விழுந்து உள்ளது. இதனால் படுகாயமடைந்த சிறுவனை பெற்றோர்  மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். 3 வயதே ஆன குழந்தை மழைக்கு பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.