தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் லஞ்சம், ஊழல் மற்றும் கடன் வாங்குவதில் தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆட்சியாக திமுகவின் திராவிட மாடல் ஆட்சி இருந்து வருவதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

தர்மபுரி பிரசாரத்தில் பேசிய அவர், சட்டப்பேரவை தேர்தலின் போது கவர்ச்சியான திட்டங்களை சொல்லி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த பல்டி அடித்து விட்டார்கள். தங்களை ஏமாற்றிய திமுக அரசாங்கத்திற்கு இந்த தேர்தலில் தகுந்த பதிலடித்தன மக்கள் தயாராகிவிட்டனர் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.