தர்மபுரி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த இபிஎஸ், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தவரை பாமக இரண்டாவது இடத்தில் இருந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு ஐந்தாம் இடத்திற்கு சென்று விட்டது என்று விமர்சித்தார். அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொண்டு இருப்பவர் அன்புமணி. மக்களுக்காக அல்ல பதவி வேண்டும் என்பதற்காக என்று சாடிய இபிஎஸ், INDIA கூட்டணியால் ஒருபோதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.