இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் ரேஷன் கார்டுகளை முக்கிய ஆவலமாகக் கொண்டு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 45 ஆயிரத்து 509 நபர்களுக்கான ரேஷன் அட்டைகளை வழங்க உள்ளது.

அவர்களுக்கான உறுதிப்படுத்துதல் செய்திகள் அவர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த மொபைல் குறுஞ்செய்தியை ரேஷன் கடைகளில் காட்டி அவர்கள் குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருள்களையும் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.