திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோசுகுறிச்சியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் ராஜா என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணமூர்த்தி தனது வயலில் இருந்த மரங்களை வெட்டியுள்ளார் அப்போது அங்கு வந்த ராஜா மரம் வெட்டியதில் தனக்கும் பங்கு இருப்பதாக கூறி தகராறு செய்தார்.

இதில் கோபமடைந்த ராஜா தான் மறைத்து வைத்திருந்த கட்டையால் கிருஷ்ண மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.