நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு சாலையில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு மதுரையைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்காக அய்யனார் ராமாபுரம்புதூர் பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் இரண்டாவது மாடியில் அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று முன்தினம் அய்யனார் இரவு வேலை முடிந்து தான் தங்கியிருக்கும் அறைக்கு சென்றார்.

பின்னர் இரண்டாம் தளத்தின் வெளியே கைப்பிடி சுவரில் சாய்ந்து கொண்டு செல்போன் பேசிக் கொண்டிருந்த அய்யனார் கால் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அய்யனாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.