மதுரையில் இருந்து வேன் ஒன்று ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேன் மதுரை மாவட்டத்திலுள்ள வி.அம்மாபட்டி அருகே சென்றபோது மானாமதுரை நோக்கி சென்ற கார் வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் மோதிய வேகத்தில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு வாகனங்களில் வந்த 13 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 13 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.