இந்தி மற்றும் கன்னடத்தில் பிரபலமான பல பாடல்களை பாடி கவனம் ஈர்த்தவர் தான் சோனு நிகாம். இவர் பத்மஸ்ரீ விருது பெற்று உள்ளார். இந்நிலையில் இவரது இசைநிகழ்ச்சி மும்பையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிவசேனா MLA பிரகாஷ் பட்டர்பேகரின் மகன் மற்றும் மருமகன் போன்றோர் சோனு நிகாமுடன் செல்பி எடுக்க விரும்பினர்.

இதற்கிடையில் நேரலை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்ததால் சோனு பாதுகாவலர்கள் அவர்களை தடுத்தனர். இதன் காரணமாக கோபமடைந்த MLA மகனின் உடன் வந்தவர்கள் பாதுகாவலர்கள் மற்றும் சோனு நிகாமையும் கடுமையாக தாக்கினர். இதனால் பாடகர் உட்பட காயமடைந்த பாதுகாவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.