இந்திய சினிமாவின் முன்னனி நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து புகழ்பெற்றார். கலைத் துறையில் ஸ்ரீதேவி ஆற்றிய பணிக்காக அவருக்கு கடந்த 2013 ஆம் வருடம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கடந்த 2018ம் வருடம் பிப்ரவரி 24ம் தேதி ஸ்ரீதேவி இறந்தார். இவருடைய மகளான ஜான்வி கபூர், இப்போது பல இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் 5வது வருட நினைவுநாளை முன்னிட்டு ஜான்விகபூர், தன் சமூகவலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது “இன்னும் உங்களை அனைத்து இடங்களிலும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களை பெருமைப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் அனைத்து செயல்களையும் செய்கிறேன். நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அனைத்தும் உங்களிடம் துவங்கி உங்களிடமே முடிகிறது” என அவர் பதிவிட்டுள்ளார்.