சென்னை மாநகரின் போக்குவரத்தை விரைவாகவும் மாற்றும் விதமாக மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தப்படுகிறது. தற்போது phase-1 திட்டத்தின் கீழ் நீல மற்றும் பச்சை என இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் கீழம்பாக்கம் வரை மெட்ரோ வழித்தடத்தை நீட்டிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து phase-1 திட்டத்தில் ஊதா, காவி, சிவப்பு என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் வரவுள்ளது. வருகிற 2020 -ஆம் ஆண்டு இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் phase-1 திட்டத்தில் செயல்பட்டு வரும் ரயில் நிலையங்களில் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டை அதிகரித்து வருமானம்  ஈட்ட சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது. ஆலந்தூர், கோயம்பேடு, சென்ட்ரல் மெட்ரோ, திருமங்கலம் போன்றவற்றில் மட்டுமே வர்த்தக பயன்பாடுகள் ஓரளவு இருக்கிறது. நிர்வாகம் கடந்த 2019 -ஆம் ஆண்டு வர்த்தக ரீதியில் 37.3 கோடி வருமானம் ஈட்டியது. அதேபோல் 2020 – 2021 ஆம் ஆண்டில் கொரோனா நெருக்கடி சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் பின் 2021 2022-ம் நிதி ஆண்டில் 35 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்த நிலைமை மாற்றி தனியார் நிறுவனங்களை ஈர்க்க மெட்ரோ நிர்வாகம் புதிய டெண்டர் கோரவுள்ளது.

வரும் மார்ச் மாதம் இதற்கான டெண்டர் கோரப்பட்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிவு வரும் என தெரிகிறது. அதேபோல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒவ்வொரு தளத்திலும் இடங்களையும் வர்த்தக ரீதியில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரம் விளக்கு, உயர் நீதிமன்றம், வடபழனி, தேனாம்பேட்டை, சென்னை சென்ட்ரல், திருமங்கலம், எல்ஐசி, ஏ.ஜி.டி.எம்.எஸ் போன்றவற்றில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்க்கெட் ரேட் என்னவென்று சரியாக ஆராய்ந்து கட்டுபடியாக கூடிய கட்டணத்திற்கு வாடகைக்கு விட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் வர்த்தக பயன்பாடும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சரியான வகையில் கையாள வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளனர்.