சென்னை மற்றும் நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏப்ரல் 4 இன்று முதல் வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.