ஜெயலலிதா மறைந்த பின்னர் இபிஎஸ் சசிகலா அணியில் இருந்தார். சசிகலா முதலமைச்சராக முயற்சித்த போது ஓபிஎஸ் தர்மயுத்தம் என காமெடி செய்தார். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கூவத்தூர் கவனிப்புகளால் தரையில் ஊர்ந்து பழனிச்சாமி முதலமைச்சரானார்.

பிறகு ஆர் கே நகரில் டிடிவி தினகரனுக்காக பரப்புரை செய்தார். பின்னர் ஓபிஎஸ் உடன் சேர்ந்து டிடிவி தினகரனுக்கு எதிராக பரப்புரை செய்தார். அடுத்ததாக அதிமுக பொது குழுவில் ஓபிஎஸ்க்கு வாட்டர் பாட்டில் மரியாதை அளிக்கப்பட்டது. ஒரு மெகா சீரியலின் கதை போன்ற குழப்பங்கள் நிறைந்த துரோக கதைகள் தான் பழனிசாமியின் கதை என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.