சென்னை தீவு திடலில் தனியார் சார்பில் பொருட்காட்சி மற்றும் மீன்கள் கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்த பொருட்காட்சியில் இருந்த ராட்டினத்தில் பழுது ஏற்பட்ட நிலையில் ராட்டினத்திற்கு இடையே சுழலும் இணைப்பு சக்கரத்தை நிறுத்தாமல் அதில் ஏறி நின்று ராம்குமார் என்பவர் பழுது பார்க்கும் போது சுழலும் சக்கரத்தில் சிக்கிக்கொண்டு படுகாயம் அடைந்தார்.

உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ராம்குமாரை காப்பாற்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.