தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 20ம் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 3.50 மணிக்கு எழும்பூரை வந்தடையும். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து பலரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்த நிலையில் அவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.