சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சேவை இன்று  மே 8 ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கேரளாவின் குருவாயூருக்கு தினம் தோறும் காலை 9 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று மே 8-ம் தேதி ஆலப்புழா வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டயம் வழியாக செல்லும் எனவும் மே 26, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா வழியாக செல்வதற்கு பதில் கோட்டயம் வழியாக செல்லும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.