சென்னையிலிருந்து டெல்லி மாநிலம் நிஜாமுதீன் செல்லும் விரைவு ரயில் இன்று ஏழு மணி நேரம் காலதாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியே வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையிலிருந்து டெல்லி நிஜாமுதீன் செல்லும் நிஜாமுதீன் துரந்தோ விரைவு ரயில் ஜூன் 12ஆம் தேதி அதாவது திங்கட்கிழமையான இன்று வழக்கமாக காலை 6.30 மணிக்கு புறப்படும். ஆனால் இன்று காலதாமதமாக அதாவது ஆறு மணி 55 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.