தமிழக முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி மற்றும் ஜூன் ஏழாம் தேதி என இரண்டு முறை பள்ளிகள் திறப்பு அறிவிக்கப்பட்டு அதன் பிறகு கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஒன்னு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது. அவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் இன்று வர தேவையில்லை. இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறையை ஜாலியாக கொண்டாடுங்கள். ஆனால் ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என அரசு தெரிவித்துள்ளது.